Sunday, September 5, 2010

ஈரானில் மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள பெண்ணுக்கு மேலும் ஒரு தண்டனை: 99 கசையடிகள்

ஈரானில் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுஇகல்லால் எறிந்து கொல்லப்படவுள்ள நிலையில் ஷகீனா மொஹமதீ அஸ்தியானி என்ற பெண்ணுக்கு 99 கசையடிகள் வழங்கப்படவேண்டும் என்று மேலும் ஒரு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

தலையில் முக்காடு இன்றி லன்டன் பத்திரிகையொன்றில் இவரது படம் வெளியானதே இந்தப் புதிய தண்டனைக்குக் காரணமாகும்இதலையில் முக்காடின்றி பெண்கள் வெளியில் வருவதோ அவர்கள் படங்கள் வெளிவருவதோ ஈரானில் தண்டனைக்குரிய குற்றமாகும்.

 

இந்நிலையில் அஸ்தியானி பற்றிய செய்தியொன்று அவரின் புகைப்படத்தோடு டைம்ஸ் ஒப் லண்டன் பத்திரிகையில் அன்மையில் வெளியானது.அதில் அஸ்தியானி முக்காடின்றி காணப்படுகின்றார்.

 

ஆனால் இந்தப் படம் அஸ்தியானியுடையதல்ல என்றும் அது தவறாகப் பிரசுரமானது என்றும் சம்பந்நப்பட்ட பத்திரிகை விளக்கமளித்துள்ளது.அந்தப் படம் உண்மையிலேயே தற்போது சுவீடனில் வசித்துவரும் ஈரான் அரசியல் அதிருப்தியாளரான சுசான் ஹெஜாரத் என்பவருடையது.

 

இவர் இந்தப் பத்திரிகைக்கு அஸ்தியானி சம்பந்தப்பட்ட செய்தியை அனுப்பும் போது ஈமெயில் மூலமாக இரண்டு புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார்.அதில் முக்காடின்றி காணப்படுவது சுசானின் புகைப்படம்.

 

ஆனால் பத்திரிகை இதை தவறாக அஸ்தியானி என்ற விளக்கத்தோடு பிரசுரித்துவிட்டது. மரணதண்டனைக்கு முன் கசையடி தண்டனை விதிக்கப்பட இதுவே காரணமாகும். இந்தத் தண்டனைகளை நிறைவேற்றக் கூடாது எனவும் அதற்கு எதிராகவும் சர்வதேச அமைப்புக்கள் பல குரல் கொடுத்துள்ளன

1 comment:

Blog Archive

About This Blog

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP